நாமக்கல், மே 14- பரமத்திவேலூரைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனம், அதிக வட்டி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக பாதிக்கப் பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது, நாமக்கல் மாவட்டம், பரமத் திவேலூரை தலைமையிடமாகக் கொண்டு தனியார் நிதி நிறு வனம் செயல்பட்டு வந்தது. மாவட்டம் முழுவதும் உள்ள மக்க ளிடம் அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி ரூ.ஒரு லட் சம் முதல் ரூ.20 லட்சம் வரை பணம் வசூலித்தது. தொடக்கத் தில் குறிப்பிட்டவாறு வட்டி பணம் கொடுத்து வந்த நிலையில், நாளடைவில் அசலும், வட்டியும் தரவில்லை. இதையடுத்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டா லும் உரிய தகவல் கிடைக்கவில்லை. எனவே, சம்பந்தப் பட்ட நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து, எங்களு டைய பணத்தை மீட்டுத் தரவேண்டும் என அதில் கூறப்பட் டுள்ளது.