உடுமலை, மே. 18- அமராவதி அணையில் முறைகே டான தண்ணீர் திறப்பை கண்டித்து விவ சாயிகள் ஆற்றில் இறங்கி போராட்டத் தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அமராவதி அணையின் மூலம் சுமார் 55 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வச தியும், பல ஆயிரம் கிராமங்களுக்கு நேர டியாகவும், மறைமுகமாகவும் குடிநீர் வசதி பெற்று வருகிறது. பருவ மழை இல்லாத காரணத்தால் தற்பொழுது அணையில் நீர்மட்டம் 36 அடியாக மட் டுமே உள்ள நிலையில் பொது பணித் துறை அதிகாரிகள் தண்ணீரை திறந்து உள்ளதை கண்டித்து விவசாயிகள் அம ராவதி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினார்கள். இது குறித்து தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் எம்.எம் வீரப்பன் செய் தியாளர்களிடம் பேசுகையில், அமரா வதி அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கபட் டற்கு விவசாயிகள் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால், குடிநீர் தேவை என்ற பெயரில் ஆற்றின் கரைப் பகுதியில் இருக்கும் நிறுவனங்கள் மற் றும் வசதி படைத்த விவசாயிகள் அதிக திறன் கொண்ட மின்மோட்டார் களை வைத்து பல கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அமாரவதி ஆய கட்டு இல்லாத விவசாய நிலங்களுக்கு தண்ணீரை எடுத்து செல்கின்றனர். பொது பணித்துறை அதிகாரிகள் ஆற் றின் கரைப்பகுதியில் இருக்கும் மின் இணைப்புளை துண்டிக்க வேண்டும். மேலும் குடிநீர் பயன்பாட்டிற்கு செல் லும் தண்ணீரை திருடுபவர்கள் மீது கடு மையான நடவடிக்கை எடுக்க வேண் டும். எவ்வித முன் நடவடிக்கையும் எடுக் காமல் குடிநீர் என்ற பெயரில் தண் ணீர் திறந்து விட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தண்ணீர் திருட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய மற்றும் புதிய ஆயகட்டு விவசா யிகள் பாதிக்காத வகையில் அணை யில் இருந்து தண்ணீர் திறப்பு இருக்க வேண்டும் என்பதை மாவட்ட நிர்வாகத் தின் கவனத்தில் கொண்டு செல்லும் வகையில் மடத்துக்குளம் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் இறங்கி விவ சாயிகள் போராட்டம் நடத்தினோம். உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் இரண்டு நாட்களில் மடத்துக்கு ளம் பகுதியில் இருந்து ஆயிரக்கணக் கான விவசாயிகள் இருசக்கர வாக னத்தில் ஊர்வலமாக சென்று அமரா வதி அணையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம், என்றார். போராட்டம் நடத்திய விவசாயிகளி டம் மடத்துக்குளம் வட்டாச்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு போராட்டம் முடிவுக்கு வந்தது.