சேலம், ஜூன் 2- சேலம் ரயில்வே நிலையத்தை, அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.45 கோடி யில் மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சேலம் ரயில்வே கோட்டத்தின் தலைமை ரயில்வே நிலையமாகத் திக ழும் சேலம் ரயில் நிலையம் வழியாக நாள்தோறும் 130க்கும் மேற்பட்ட ரயில் கள் இயக்கப்படுகிறது. இங்கு தினமும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பயணி கள் வந்து செல்கின்றனர். இந்நிலை யில், சேலம் ரயில் நிலையத்தை, அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்த ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் கடந்த 4 மாத மாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரயில் நிலைய முன்பகுதியை அழகுப்ப டுத்த மிகப்பெரிய தூண்கள் அமைத்து வாகனங்கள் நிறுத்தும் முகப்பு பகு தியை நீட்டிக்கின்றனர். அத்துடன் அந்த முகப்பை கூம்பு வடிவில் அழகுபடுத்த உள்ளனர். ரயில் நிலையத்துக்கு வாகனன்ங்களில் பயணிகள் மிக எளிதாக வந்து செல்லும் வகை யில், முன்பகுதியில் சாலை வசதியை ஏற்படுத்துகின்றனர். வாகன நெருக்கூடி இல்லாத வகையில் விரிவாக்க பணியையும் மேற்கொண்டு வருகின்ற னர். பயணிகளின் வசதிக்காக நடைபா தைகள் உருவாக்கப்படுகிறது. முதல் நடைமேடையில் நவீன கழிப்பறைகள் அமைக்கப்படுகின்றன. அத்துடன் பயணிகள் அமரக் கூடுதல் இருக்கைகள், குடிநீர் குழாய்கள், தங்குமிடங்கள் ஏற் படுத்தப்படுகின்றன. முதல் நடை மேடையிலிருந்து 5 ஆவது நடைமே டையை இணைக்க மேம்பாலம் கட்டப்படுகிறது. இந்த நடை மேம்பா லத்தில் ஏறி இறங்க லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் வசதி ஏற்படுத்தப்படு கிறது. மேலும், ரயில் நிலையம் முழுமை கும் பயணிகளின் தேவைக்குக் குடிநீர் வழங்க புதிய தொட்டிகள் கட்டப்படு கின்றன. கழிவுநீர் முறையாக வெளியேற வசதிகள் செய்யப்பட்டுள் ளன. சேலம் ரயில் நிலையத்தின் மறுபுற மான சூரமங்கலம் பகுதியில், இரண்டா வது நுழைவு வாயில் பிரமாண்டமாக உருவாக்கப்படுகிறது. இந்த 2 ஆவது நுழைவு வாயிலை பயன்படுத்தி, அதிகப்படியான பயணிகள், ரயில்வே நிலையத்துக்குள் வர வழிவகை செய்யப்படுகிறது. மாற்றுத்திற னாளிகள் வசதிக்காக பிளாட்பாரம்க ளில் சாய்வு தளங்கள் அமைக்கப்ப டுகின்றன. மின்னாற்றல் செயல்திறனை மேம்ப டுத்த மரபு சாரா எரிசக்தி ஆதாரங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் குறைந்த மின்சாரத்தில் சிறந்த வெளிச்சத்தை வழங்க ரயில் நிலைய கட்டடங்கள் முழுவதும் எல்இடி விளக் குகள் பயன்படுத்தப்படுகிறது. இதுகு றித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகை யில், சேலம் ரயில்வே நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.45 கோடி செலவில் மேம்படுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. முன்பகுதி மேம்பாடு, முதல் பிளாட்பாரத்தில் கழி வறை வசதி பணிகள் முடிந்துள்ளன. இதர பணிகளை வேகமாக செய்து வரு வதால், 6 மாதகாலத்துக்குள் பெரும்பா லான வேலைகள் முடிந்து, புதிய தோற்றத்தில் சேலம் ரயில்வே நிலை யம் காட்சியளிக்கும், என்றனர்.