கோவை, ஜூன் 14- நீட் தேர்வை ரத்து செய்ய வலியு றுத்தி கோவையில் இந்திய மாண வர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பல்வேறு பகுதி களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.
கோவை மாவட்டம், ஆனை மலை முக்கோணம் பகுதியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க தாலுகாச் செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். இதில், மாவட் டப் பொருளாளர் தினேஷ் ராஜா மற் றும் மாவட்டக்குழு உறுப்பினர் சக்தி வேல், கமிட்டி உறுப்பினர்கள் லாவண்யா, பவித்ரா, ராஜேஷ், பிர தீப், அரவிந்த், ரமேஷ், கோபி உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இ
தைபோன்று, அன்னூரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், வாலிபர் சங்க கோவை மாவட்டப் பொருளா ளர் தினேஷ் ராஜா, அன்னூர் ஒன்றி யத் தலைவர் பிரதீப், மாவட்டச் செயற் குழு உறுப்பினர் தீபிகா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இதேபோன்று, நீட் தேர்வு குளறு படிகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி கோவையில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர், கோவை பிஎஸ்என்எல் தலைமை அலுவ லகம் முன்பு ஆர்ப்பாட்டத்த்தில் ஈடு பட்டனர்.
இதில் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் பி.சினேகா, மாவட் டத் தலைவர் எம்.பிரசாந்த், முன்னாள் மாநிலத் தலைவர் எம்.குணசேகர், துர்கா உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர்.