districts

img

அணைக்கட்டு சீரமைப்பு பணிகள்

பொள்ளாச்சி, மே 31- பொள்ளாச்சி அடுத்த  ஆழியார் அணைப்பகு தியில், பழுதடைந்த அணைக் கட்டுகளை சீரமைக்கும் பணிகள் முடியும் தருவாயில் இருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையில் இருந்து பள்ளி விளங்கால், அரியாபுரம், காரப்பட்டி, பெரியணை, வடக்கலூர் ஆகிய ஐந்து அணைக் கட்டு மூலம், பழைய ஆயக்கட்டு பாசன பரப்பில் 6400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த 5 அணைக்கட்டுகள் கட் டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியதால், பழுத டைந்து காணப்பட்டது. இதையடுத்து இந்த  அணைக் கட்டுகளை சீரமைக்க தமிழக அரசு  ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்த நிலையில்,  அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.  இந்தநிலையில், சீரமைப்பு பணிகள் தற் போது முடியும் தருவாயில் உள்ளதால், அப்ப குதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தது உள் ளனர்.

;