districts

img

அப்பாவி பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் இஸ்ரேல் அரசை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஜூன் 3- பாலஸ்தீன அப்பாவி பெண்கள்  மற்றும் குழந்தைகள் மீது குண்டு வீசி கொலை செய்யும் இஸ்ரேல் அரசின் கொடூர நடவடிக்கையை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் பரவலாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபா ளையம் வடக்கு ஒன்றியம் வெப் படை நால் ரோடு பகுதியில் இனப் படுகொலை செய்யும் இஸ்ரேல்  அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத் திற்கு வடக்கு ஒன்றிய குழு உறுப்பி னர் வி.சண்முகம் தலைமை தாங்கி னார். இதில் கட்சி ஒன்றியக் குழு செய லாளர் சந்திரமதி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எம்.தனேந்திரன், எம்.மணிகண்டன், எம்.ஆர்.வெங்க டாசலம் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர்.  முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலையை கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பினர்.  சேலம்  பாலஸ்தீனத்தின் மீது தாக்கு தல் நடத்தும் இஸ்ரேலை  அரசை  கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியினர் சேலத்தில் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில், காங்கிரஸ் கமிட்டி மாந கர மாவட்டத் தலைவர் பாஸ்கர், இந் திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட  தலைவர் சையத் மூஸா, திராவிடர் கழகம் மாவட்டத் தலைவர் இளவழ கன், காங்கிரஸ் கமிட்டி மாவட்டப் பொருளாளர் தாரை ராஜகணபதி,  சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் பி. ராமமூர்த்தி எம். குண சேகரன் ஐ. ஞானசௌந்தரி, எஸ்.  கே. சேகர், மேற்கு மாநகரச் செயலா ளர் எம். கனகராஜ் வடக்கு மாநகரச் செயலாளர் என். பிரவீன் குமார் சேலம் தாலுகா செயலாளர் கே. எஸ். பழனிசாமி நங்கவள்ளி செய லாளர் கே. ராஜாத்தி, கொங்கணா புரம் செயலாளர் எஸ். முத்துசாமி  மேச்சேரி ஒன்றியச் செயலாளர் ஜி. மணிமுத்து மேட்டூர் கொளத்தூர் செயலாளர் வசந்தி, சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர்கள்,  சிபிஐ கமிட்டி செயலாளர் ரமணி, மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்டச் செயலாளர் சாதிக் பாஷா  உட்பட பல்வேறு கட்சிகளை சார்ந்த  நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து  கொண்டனர்.

;