districts

img

வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாய்வு

நாமக்கல், ஜூன் 1- நாமக்கலில் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் முகவர்களுக்கான பயிற்சி கூட்டம் திமுக சார்பில் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 4 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் முகவர்கள் நடந்து கொள்ள வேண்டிய விதங்கள் குறித்தும், கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும், கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்தும் திமுக சார்பாக பயிற்சி கூட்டம் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் காணொளி காட்சியின் மூலம் நடைபெற்றது. இந்த காணொளி பயிற்சியை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  தலைமையில், மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் என்.ஆர் இளங்கோ நடத்தினார். நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக  செயலாளர் மதுரா செந்தில் உள்ளிட்ட சுமார் 100க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்ற  தொகுதிக்குட்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் அருகில் அமர்ந்திருக்க வேண்டியவர்கள் யார், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் எடுத்துச் செல்ல  வேண்டிய பொருள்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறை கள் என்னென்ன என்பது குறித்து மாநில வழக்கறிஞர் அணி  செயலாளர் என்.ஆர்.இளங்கோ காணொளி காட்சி மூலம் பயிற்சி அளித்தார். இதில், முகவர்கள் மிகவும் கவனத்துட னும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண் டார். நிகழ்ச்சியில் திருச்செங்கோடு ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

;