திருப்பூர், ஜூன் 1- இஸ்ரேலின் கொடூர குண்டுவீச்சுத் தாக் குதலில் ராஃபாவில் அகதிகள் முகாமில் பலியான காஸா குழந்தைகளுக்கு திருப்பூ ரில் சனியன்று குழந்தைகள் மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். போரில்லா சமுதாயம் மலர வேண்டும் எனவும், போரில் உயிரிழந்த குழந்தைகள், பெண்கள் மற்றும் அனைவரின் நினைவாக பாலர் பூங்கா திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் வடக்கு நகரில் உள்ள எஸ்.வி. காலனி, முருங்கப்பாளையம், எம்.ஜி.ஆர் நகர், ஜி.கே.லேஅவுட், கருமாரம்பாளயம் ஆகிய பகுதிகளில் சனியன்று மெழுகு வத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், ஏராளமான குழந்தைகள் பங்கேற்ற னர்.