districts

img

பறவைகள் பலவிதம்

கோவை, மே 21- கோவைக்கு இடம்பெயர்ந்து வந்துள்ள பறவைகளை காண பறவை ஆர்வலர்கள் குவிந்தனர். ஆண்டுதோறும், கோடை காலம் முடிந்து கோடை மழை துவங்கும் நேரத்தில் காலமாற்றம் காரணமாக பல்வேறு பறவைகள் இடம்பெயர்ந்து செல்லும். குறிப்பாக மிதமான வெப்பநிலை இருக்ககூடிய இடங்களுக்கு அதிகமான பறவைகள் இடம்பெயரும். தற்போது கோவை, நீலகிரி பகுதிகளில் மிதமான குளிர்ச்சியான சூழல் நிலவி  வருவதால் உள்நாட்டு பறவைகள் மட்டுமன்றி வெளிநாட்டு பறவைகளும் அதிகமாக வருகின்றன. கோவை வாலாங்குளத்தில்  பெலிகான் பறவைகள் அதி களவு இடம் பெயர்ந்து வந்துள்ளன. இதனை காண்பதற்கு பல்வேறு பறவை ஆர்வலர்கள் குவிந்துள்ளனர். பலரும் கேமராக்களில் புகைப்படங்களை எடுத்து செல்கின்றனர். மேலும் புகைப்பட கலைஞர்களும் அதிநவீன கேம ராக்களை கொண்டு அப்பறவைகளை புகைப்படம் எடுத்து வருகின்றனர். மேலும் அவ்வழியாக நடைபயிற்சி மேற் கொள்ளும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பறவை களை ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

;