districts

img

கோழிப்பண்ணையில் பெரும் தீ விபத்து: 2740 கோழிகள் கருகின

நாமக்கல், மே 15- குமாரபாளையம் அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில், 2 ஆயிரத்து 740 கோழிகள் தீக்கிரையாகின. நாமக்கல் மாவட்டம், குமாரபா ளையம் அருகே உள்ள களியனூர்  கிராமத்திற்குட்பட்ட வெள்ளப் பாறை என்னும் பகுதியில் கருப் பண்ணன் என்பவர், தனது விவசாய  நிலம் அருகே 2 கோழிப்பண்ணை செட் அமைத்து, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், புத னன்று காலை 8 மணி அளவில் வழக்கம் போல் தனது கோழிக ளுக்கு குடிநீர் மாற்றி வைத்து விட்டு, வெளியே வந்த பொழுது, ஒரு கோழிப்பண்ணை பகுதியில் இருந்து லேசான புகை மட்டும் வெளிவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கருப்பண்ணன் உள்ளே சென்றபொழுது லேசான புகை என்பதால் தண்ணீர் எடுத்து ஊற்றி புகையை கட்டுப்படுத்த முயற்சி செய்துள்ளார். ஆனால், புகையானது தீயாக மாறி, அந்த பண்ணை செட்டு முழுவதும் தீ பரவியது. இதுகுறித்து தகவல றிந்த வெப்படை தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். ஆனால்  சுமார் 3,000 சதுர அடியில் அமைக் கப்பட்ட கோழிப்பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த 2740 கோழி கள் தீயில் கருகி உயிரிழந்தன. இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின்கசிவால் தீ விபத்து  ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதே னும் காரணமா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, இதுகுறித்து தகவலறிந்த குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து தீ விபத்தில் ஏற்பட்ட இடத்தினை பார்வையிட்டார். மேலும், தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட கருப்பண்ணனுக்கு ஆறுதல் கூறி, பாதிக்கப்பட்ட கருப்பண்ணனுக்கு வருவாய்த்துறையினர் மூலம் நிவா ரணம் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

;