districts

img

மாற்றுத்திறனாளிகளுக்கான கூடைப்பந்து போட்டி

தமிழக அணி அபார வெற்றி கோவை, ஜூலை 4- தென்னிந்தியா அளவிலான மாற்றுத்திற னாளிகளுக்கான சக்கர நாற்காலி கூடைப் பந்து போட்டியில் தமிழக அணி முதலிடத்தை  பிடித்து கோப்பையை தட்டி சென்றது. மாற்றுத்திறனாளிகளின் திறமைகள் மற்றும் சக்கர நாற்காலி கூடைப்பந்து  விளையாட்டு பற்றிய விழிப்புணர்வை ஏற் படுத்தும் விதமாக மாற்றுத்திறனாளிகளுக் கான தென்னிந்திய அளவிலான சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டி, கோவை நேரு விளை யாட்டு மைதானத்தில் நடைபெற்றது. பாரத் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா  உள்ளிட்ட மாநில அணிகளை சேர்ந்த விளை யாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில், கலந்து கொண்ட மாற் றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் அசத்த லாக பந்தை லாவகமாக எடுத்துச் சென்று  விளையாடினர். மூன்று நாட்களாக நடை பெற்ற போட்டியில் இறுதி ஆட்டத்தில் தமிழ் நாடு அணி முதல் இடத்தையும், கர்நாடக அணி இரண்டாவது இடத்தையும், பாண்டிச் சேரி அணி மூன்றாவது இடத்தையும் பிடித் தன. இதில், வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட் டன. சாதனைக்கு ஊனம் ஒரு தடையல்ல என் பதை நிரூபிக்கும் வகையில் மாற்றுத்திற னாளிகளின் இந்த விளையாட்டை பார்வையா ளர்கள் நெகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தனர்.

;