districts

img

சிலம்பாட்டக் குழுவினருக்கு பாராட்டு விழா

திருப்பூர், செப். 19 - திருப்பூர் மாவட்ட அளவில் நடை பெற்ற சிலம்பாட்டம் போட்டியில்  வெற்றி பெற்ற இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் ஜிகினா சிலம்பாட்டக் குழுவினருக்கு பாராட்டு விழா நடை பெற்றது. திருப்பூர் மாவட்ட சிலம்பாட்டக் கழ கத்தின் சார்பில் கடந்த 11ஆம் தேதி  அருள்புரம் சேடபாளையத்தில் மாவட்ட அளவிலான சிலம்பாட்டக்  குழுப் போட்டி நடத்தப்பட்டது. இப் போட்டியில் வாலிபர் சங்கத்தின்  எஸ்.வி. காலனி பகுதி பகத்சிங் சிலம் பக்குழு மற்றும் சே குவாரா சிலம் பக்குழு சார்பில் 23 மாணவ, மாணவிகள் சேர்ந்து ஜிகினா சிலம்பக் குழு  என்னும் பெயரில் பங்கேற்றனர். 10க்கும்  மேற்பட்ட குழுக்கள் பங்கேற்ற இந்த  கடுமையான போட்டியில் ஜிகினா குழு வினர் மூன்றாம் இடத்தைக் கைப்பற்றி னர். வாலிபர் சங்கத்தின் ஜிகினா குழுவி னருக்கு சிலம்பாட்டம் மூத்த ஆசான்  எம்.மதிவாணன், பயிற்சியாளர் அரு ணாச்சலம், ஒருங்கிணைப்பாளர்கள் ஜி.கிஷோர்குமார், அவிநாசியப்பன், செல்லமுத்து, முருகன், தங்கராஜ் ஆகி யோர் பயிற்சி அளித்து வெற்றிக்கு ஊக் குவித்தனர்.  இந்திய ஜனநாயக வாலிபர் சங்க  வடக்கு மாநகர விளையாட்டு கழகத் தின் சார்பில் தியாகி பழனிச்சாமி நிலை யத்தில் ஞாயிறன்று இந்த குழுவின ருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. சங்கத்தின் மாநகர துணை தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் எஸ்.அருள், மாவட்ட விளையாட்டு கழகத் தின் கன்வினர் டி.உமாசங்கர் ஆகியோர்  வாழ்த்திப் பேசினர்.வாலிபர் சங்க முன் னாள் மாநகரத் தலைவர் துரை சம்பத்  நிறைவுரை ஆற்றினார்.வாலிபர் சங்க  மாநகர விளையாட்டு கழகத்தின் கன்வி னர் நவீன் நன்றி கூறினார்.