districts

img

சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு: காதில் பூ வைத்து போராட்டம்

நாமக்கல், மே 19- நாமக்கல்லில் சிப்காட் அமைக் கும் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் காதில் பூ வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம் வளைய பட்டி, அரூர், பரளி, என்.புதுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 820 ஏக்கரில் சிப்காட் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள் ளது. அதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்ட நிர் வாகம் நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும், நீர்நிலைகள் உள்ள பகுதிகளில் சிப்காட் அமைப்பதற்கு வருவாய்த் துறையினர் முயன்று வருகின்ற னர். இத்திட்டத்தை எதிர்த்து  சிப்காட் எதிர்ப்புக்குழுவினர், விவ சாயிகள் பல்வேறு கட்ட போராட் டங்களில் ஈடுபட்டு வருகின்ற னர். இந்நிலையில், சிப்காட் அமைத் தால் விவசாய நிலங்கள் பாதிக் கும். விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே இத் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, நாமக்கல் பூங்கா சாலையில் விவசாயிகள், சிப்காட் எதிர்ப்பு குழுவினர் காதில் பூ  வைத்து முழக்கங்களை எழுப்பி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். அப்போது, சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி திமுக மாநி லங்களவை உறுப்பினர் கே.ஆர். என்.ராஜேஸ்குமாரிடம் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர். முன்னதாக, இப்போராட்டத்திற்கு விவசாயிகள் முன்னேற்ற கழக மாநி லப் பொதுச்செயலாளர் பாலசுப்ர மணியம் தலைமை வகித்தார். சிப் காட் எதிர்ப்புக்குழு ஒருங்கிணைப் பாளர் ராம்குமார், கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர் ரவீந்திரன், சிப்காட் எதிர்ப்பு இயக்க நிர்வாகிகள் பழனி வேல், சரவணன், ராமசாமி, தண்ட பாணி, ரவி உள்ளிட்ட திரளான ஆண்களும், பெண்களும் போராட் டத்தில் கலந்து கொண்டனர்.

;