திருப்பூர், செப். 30 - திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை அமெரிக் காவில் இருந்து வந்திருந்த தம்பதியர் நேரில் பார்வையிட்டனர். அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஜிம். இவரது மனைவி டெப் ளின் ராணுவ ஹெலிகாப்டர் பைலட்டாக வேலை செய்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர்கள் இருவரும் பொள்ளாச்சி ஆழியார் அறிவுத் திருக்கோவிலில் யோகா பயிற்சிக்காக 15 நாள் வந்துள்ளனர். அமெ ரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளாக 48 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பல்லடம் வனால யத்தின் செயல் தலைவர் க.பாலசுப்பிரமணி யத்தின் வேண்டுகோளை ஏற்று திருப்பூர் வந்தனர். ஒரு தனியார் பள்ளியையும், ஒரு அரசுப் பள்ளியையும் பார்வையிட விரும்பி னர். எனவே திருப்பூர் மாநகராட்சி ஜெய்வா பாய் மாநகராட்சிப் பெண்கள் மேல் நிலைப் பள்ளி, கிட்ஸ் கிளப் இண்டர்நேசனல் பள்ளி ஆகியவற்றுக்குச் சென்றனர். திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் அதிக பட்சமாக 5500 மாணவிகளின் படித்து வருவ தைக் கேட்டு அவர்கள் வியந்தனர். ஜெய்வாபாய் பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெல்லா அமலோற்பவ மேரி இருவரையும் வரவேற்று, தமிழக கல்வி முறை பற்றியும், தமிழக அரசின் மதிய உணவுத் திட்டம், இல வச பேருந்து வசதி, இலவச லேப்டாப், மிதி வண்டி போன்றவற்றை பற்றியும் எடுத்துக் கூறினார். தமிழக அரசின் கல்விச் செயல்பாடு குறித்து அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். அதேபோல் கிட்ஸ் கிளப் இண்டர்னேஷ னல் பள்ளியில், தாளாளர் நிவேதிகா ஸ்ரீராம் வரவேற்றார். நவராத்திரி கொலு கண்காட் சியை சுற்றிக்காட்டி அதற்கான விளக்கத்தை யும் அளித்தார். இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் கலாச்சாரம் குறித்த கண்காட் சியை மாணவர்கள் விளக்கினர். இதன் பின் மாணவர்களுடன் உரையாடினர். ஜெய்வாபாய் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக முன்னாள் தலைவர் ஆ.ஈசுவரன் இந்த தகவலைத் தெரிவித்தார்.