சேலம், மே 31- பள்ளி திறக்கும் நாளன்றே அனைத் துப் பள்ளிகளிலும் மாணவ, மாணவிக ளுக்கான பாடப்புத்தகங்கள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறதென சேலம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வழங்க வரப்பெற் றுள்ள பாடப்புத்தகங்கள் குறித்து, மகு டஞ்சாவடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ரா. பிருந்தாதேவி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், சேலம் மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதி தொடக்க நடுநிலைப்பள்ளிகள் என 1,567 பள்ளிகளில், 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை தமிழ் வழி யில் 71,215 மாணவ, மாணவிகளும், ஆங் கில வழியில் 36,824 மாணவ மாணவி களும் பயின்று வருகின்றனர். அதன்படி தமிழ் வழியில் 1,17,252 பாடநூல்களும், ஆங்கில வழியில் 27,161 பாடநூல்களும் பெறப்பட்டுள்ளன. மேலும், அரசு பள்ளி கள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற் றும் சுயநிதி உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகள் என 350 பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் 89,593 மாணவ, மாணவிகளும், ஆங்கில வழியில் 49,559 மாணவ, மாணவிகளும் பயின்று வருகின்றனர். அதன்படி, தமிழ் வழி யில் 6,26,612 பாடநூல்களும், ஆங்கில வழியில் 3,02,972 பாடநூல்களும் பெறப் பட்டுள்ளன. மேற்கண்ட அனைத்து பள்ளிகளி லும் பள்ளி திறக்கும் நாளன்றே மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. மேற்படி பாடநூல்கள் பெறப் பட்டு, பள்ளிகளுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளன, என்றார். இந்த ஆய்வின்போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆக்ரிதி சேத்தி, முதன்மைக் கல்வி அலுவலர் மு.கபீர், மாவட்ட கல்வி அலுவலர் சொ.சி.கோபாலப்பா, சங்க கிரி வருவாய் வட்டாட்சியர் அறிவுடை நம்பி, தலைமை ஆசிரியை தே.ராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.