districts

img

நிலச்சரிவை தடுக்கும் புதிய வகை தொழில்நுட்பம்

உதகை, மே 20– நீலகிரியில் நிலச்சரிவு அபாயம்  உள்ள பகுதிகளில் ‘சாயில் நெய்லி’ பொருத்தி ‘ஹைட்ரோ சீடிங்’ முறையில் பசுமையை பேணி பாதுகாக்கும் தொழில் நுட்பத்தை நெடுஞ்சாலைத்துறையினர் தீவிர மாக செயல்படுத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உதகை,  குன்னுார், கோத்தகிரி, குந்தா, பந் தலுார், கூடலுார் பகுதிகளில் 280  பேரிடர் பகுதிகள் கண்டறியப்பட் டுள்ளது. பருவமழை காலங்களில், மண் சரிவு, நிலச்சரிவால் பேரிடர் பாதிப்புகள் அதிகரிக்கிறது. மழைக்காலங்களில் தண்ணீர் தடை யின்றி வெளியேற நெடுஞ்சாலைத் துறை சார்பில் மாவட்டத்தில் தேவைப்படும் இடங்களில் சிறு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பராமரிப்பின்றி காணப்பட்ட சிறு பாலங்கள் சீரமைக்கப்பட்டு வரு கிறது. குறிப்பாக, நிலச்சரிவு அபா யத்தால் விளை நிலங்கள் சேதமா கிறது. இந்நிலையில், மாவட்டத் தில் நிலச்சரிவை தடுக்க நெடுஞ் சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில் நிலச்சரிவு அபாயம் உள்ள இடங்களில் ‘சாயில் நெய்லி’ பொருத்தி ‘ஹைட்ரோ சீடிங்’ முறையில் பசு மையை பேணி பாதுகாக்கும் தொழில் நுட்பம் தீவிரமாக செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. கடந் தாண்டு பரிசோதனை முயற்சியாக  உதகை –  கோத்தகிரி சாலையில்  கோடப்பமந்து மற்றும் பாக்கியநகர்  ஆகிய இரு இடங்களில் இப்பணி யானது செயல்படுத்தப்பட்டது. பசு மையை பேணி காக்கும் இந்த தொழில்நுட்பம் திருப்திகரமாக இருந்ததால், இப்பணியை மாவட் டத்தில் பிற நிலச்சரிவு உள்ள பகு திகளில் செயல்படுத்த நெடுஞ்சா லைத்துறையினர் தலைமைக்கு பரிந்துரைத்துள்ளனர். அதன்படி, மாவட்டத்தில் இத் திட்டம் 5 இடங்களில் செயல்பட்டு வருகிறது. கோத்தகிரி – குன் னுார் சாலை கட்டபெட்டு நடு ஹட்டி பவர்ஹவுஸ், குன்னுார் –  கேத்தி பாலாடா, சேலாஸ் சாலை யில் உல்லாடா பகுதி, உதகை –  கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளை யம் சாலையில் கோடப்பமந்து, மடித்தொரை என இரண்டு, உதகை – அவலாஞ்சி சாலையில் இத்தலார் என 5 இடங்களில் இப்பணியானது செயல்பட்டு வருகிறது. இதில், உதகை – கோத்தகிரி சாலையில் மடித்தொரையில் நடந்து வரும் நிலச்சரிவை தடுக்கும் புதிய தொழில்நுட்ப பணிகளை மாநில நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சந்திரசேகர் ஆய்வு செய்தார். பணித்தளத்தில் இப்பு திய தொழில் நுட்ப தொடர்பான அறி வுரைகளை பணி மேற்கொள்ளும் அலுவலர்களுக்கு வழங்கினார். கோவை நெடுஞ்சாலைத்துறை வட்ட கண்காணிப்பு பொறியாளர்  ரமேஷ், உதகை நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் குழந்தை ராஜ் உட்பட பலர் உடனி ருந்தனர்.

;