districts

img

தாய் யானையை கண்டு பரிதவித்த குட்டி யானை

கோவை, மே 30- உடல்நிலை பாதிக்கப்பட்ட தாய் யானை யின் நிலை கண்டு பரிதவித்த குட்டி யானை யின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.  கோவை வனச்சரகம், தடாகம் பிரிவு மரு தமலை அடிவாரப் பகுதியில் வனத்துறை பணியாளர்கள் ரோந்து பணி சென்றனர்.  அச்சமயம், யானை பிளிரும் சத்தம் கேட்டு,  அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.  அப்போது பெண் யானை ஒன்று குட்டியு டன் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் பெண் யானை சற்று உடல்நிலை சரியில்லா மல் இருப்பதும், குட்டி யானை அருகில் பரி தவித்துக்கொண்டிருப்பதை கண்டனர்.  இதனையடுத்து, உடனடியாக மாவட்ட வன  அலுவலர் மற்றும் வன கால்நடை அலுவ லர்களுக்கு தகவல் தெரிவிக்கபட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த  கோவை வனச்சரக பணியாளர்கள் மற்றும்  மருத்துவர்கள் யானைக்கு சிகிச்சை அளித்து  வருகின்றனர். மேலும், அருகில் உள்ள  குட்டி யானையையும் கண்காணித்து வரு கின்றனர்.

;