districts

img

மாற்றுத்திறனாளிகள் வேலை கேட்டு மனு

ஈரோடு, மே 31- மாற்றுத்திறனாளிகளுக்கு நூறு நாள் வேலை கேட்டு, தமிழ் நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்பு உரி மைக்கான சங்கத்தின் சார்பில் தாள வாடி வட்டார வளர்ச்சி அலுவலரி டம் வெள்ளியன்று மனு அளித்த னர். ஈரோடு மாவட்டம், தாளவாடி தாலுகா கமிட்டியின் சார்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டப்படி மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை அளிக்க  வேண்டும் என விண்ணப்பம் அளிக் கப்பட்டது. தாலுகா செயலாளர் நாசிக் பாய் தலைமையில், அகில  இந்திய செயல் தலைவர் நம்பு ராஜன், மாவட்டப் பொருளாளர் வி.ராஜு, மாவட்ட துணைச் செயலா ளர் ஆர்.ரமேஷ், தாலுகா தலை வர் குப்பத்தாயம்மா, முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர் சுப்பிர மணியம் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு மனு அளித்த னர். இதுகுறித்து நம்புராஜன் கூறு கையில், 100 நாள் வேலை கேட்டு  உரிய விண்ணப்பம் கொடுக்கப்பட் டுள்ளது. அவர்களுக்கு வேலை அளிக்க வேண்டும். தனி வண்ணத் தில் வேலை அட்டை அளிக்கப்பட வேண்டும். 4 மணி நேர வேலை யும், முழு ஊதியமும் வழங்க வேண் டும் என்றார்.

;