districts

மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டுகோள்

கள்ளக்குறிச்சி, செப். 8- கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் சர்வதேச காற்று மற்றும் நீல வானம் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.  மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தொடங்கி வைத்து காற்று மாசுபாடுதலை குறைக்க அதிக மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும், காற்று மாசுபடுவது தொடர்பான விழிப்புணர் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ஏற்படுத்த வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களிடம் அறி வுறுத்தினார். இதில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஏ.கே.டி. மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணிகள் திட்ட மாணவர்கள் யவாறு பேரணியில் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவிப் பொறியாளர் சங்கவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

;