கள்ளக்குறிச்சி, மே 29- கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்த வழக்கு விசா ரணையை ஜூன் 19-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து கள்ளக்குறிச்சி நீதி மன்ற நீதிபதி ஸ்ரீராம் உத்தரவிட் டார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியா மூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரண வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரு கிறது.
இந்நிலையில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை யில் இருந்து விடுவிக்கப்பட்ட பள்ளி ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகாவை மீண்டும் வழக்கில் சேர்க்க வேண்டும். வழக்கு தொடர்புடைய ஆவணங்கள், ஆதாரங்களை மிகவும் தெளிவான முறையில் வழங்க வேண்டும் என்று ஸ்ரீமதியின் தாயார் செல்வி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை கள்ளக்குறிச்சி தலைமை குற்ற வியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத் தில் புதனன்று (மே 29) நடைபெற் றது. அப்போது, பள்ளித் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகிய மூவ ரும் ஆஜராகவில்லை. மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி நேரில் ஆஜரானார்.
கடந்த 14 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், மாணவியின் தாயார் செல்வி தரப்பு வாதம் நிறை வடைந்த நிலையில், அரசு தரப்பு வழக்கறிஞர் தேவசந்திரன் பதில் விளக்கம் அளித்தார். அப்போது மாணவி ஸ்ரீமதி தாய் செல்வி சார்பில், சம்பவம் நடந்த அன்று பள்ளி நிர்வாகம், காவல் துறைக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் பதிவு, பள்ளி ஆசிரியர்கள், தாளாளர் இடையே நடைபெற்ற தொலை பேசி உரையாடல் பதிவு மற்றும் ஏற்கனவே வழங்கப்பட்ட ஓப்பன் ஆகாத 26 சிசிடிவி கேமரா பதிவு களை முழுமையாக வழங்க வேண்டும் என்று அரசுத் தரப்புக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சி ஓப்பன் ஆகாதது குறித்து வல்லுநர்களை கொண்டு, ஆய்வு செய்து அதற்கான உரிய விளக் கத்தை தாக்கல் செய்ய அரசு தரப் புக்கு நீதிபதி ஸ்ரீராம் உத்தர விட்டார். மேலும் இந்த மனு மீதான விசாரணையை ஜூன் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.