சென்னை, மே 29 - கன்னியாகுமரியில் தியானம் மேற்கொள்ளப் போவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து அதற் கான ஏற்பாடுகளை செய்திருப்பது தேர்தல் நடத்தை விதிகளுக்கு முற்றி லும் முரணானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
அந்த நிகழ்வை தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களை ஒளி பரப்பு செய்வதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று, இந்திய தலை மைத் தேர்தல் ஆணையருக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார். மே 29 புதனன்று அவர் அனுப்பி யுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாங்கள் மிக மிக கடுமையான தேர்தல் நடத்தை விதி மீறலை உங் களது கவனத்திற்கு கொண்டுவரு கிறோம். நடைபெற்று வருகிற நாடாளு மன்றத் தேர்தலின் நிறைவுக்கட்ட வாக்குப்பதிவு ஜுன் 1 அன்று நடை பெற உள்ளது;
அதற்கான பிரச்சாரம் மே 30 அன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிறைவுகட்ட வாக்குப்பதிவில் நாடு முழுவதும் உள்ள 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 57 தொகுதிகளின் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்த உள்ளனர். இத்தகைய நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விவேகானந்தர் நினைவிடத்தில் மே 30, ஜுன் 1 ஆகிய தேதிகளில் தியானம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.
தியானம் செய்வது என்பது அவரது தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம்; அதைப்பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால் அந்த நிகழ்வை அநேகமாக அனைத்து அச்சு மற்றும் மின்னணு ஊடகங் களும் சமூக ஊடகங்களும் பெரிய அளவிற்கு ஒளிபரப்ப வாய்ப்பு உள்ளது; அது நரேந்திர மோடி மற்றும் அவரது அரசியல் கட்சிக்கான மிகப்பெரிய பிரச்சாரமாக எடுத்துச் செல்லப்படவும் வாய்ப்பு உள்ளது. இது, தேர்தல் களத்தில் அனைத்து வேட்பாளர்களுக்கும், அவர்களது கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பு அளிக்கப்படும் என்ற கோட்பாட்டை கடுமையாக பாதிக் கும்; அத்தகைய சமமான வாய்ப்பி னை அனைவருக்கும் தேர்தல் ஆணையம் அளிக்கவும் பாதுகாக்க வும் வேண்டும்.
மோடியும் அவரது கட்சியும் வாக்குப்பதிவு நடைபெறும் நாள் வரையிலும் இந்த முறையில் பிரச்சார வெளிச்சத்திலேயே இருப்பார்கள் என்பது, வாக்குப்பதிவிற்கு 48 மணி நேரத்திற்கு முன்பே பிரச்சாரம் முடித்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற அடிப்படை அம்சத்தையே வீழ்த்துவதாக உள்ளது. இது மிக மிக கடுமையான தேர்தல் நடத்தை விதி மீறல் ஆகும். எனவே இந்த நிகழ்வை பிரதான ஊடகங்களும், சமூக ஊடகங்களும் ஒளி/ஒலி பரப்பு செய்வதற்கு தடை விதிக்கவும், அதன் மூலம் இதில் நீதியை நிலைநாட்டவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.