districts

img

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்

கடலூர், ஜுன் 6- தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டி யிட்ட 39 வேட்பாளர்களும் அமோக வெற்றி பெற்றனர். இதன் அடுத்து கடலூரில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கூட்டணி கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு விசிக தலைவர் தொல். திருமாவளவன், கடலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரும் அமோக வெற்றி பெற்றனர். இதனை கொண்டாடும் வகையில், இந்தியா கூட்டணி கட்சி சார்பில் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி னர்.

இதில் மாநகரத் துணை மேயர் பா.தாமரைச்செல்வன் தலைமை தாங்கி னார். மாவட்ட செயலாளர் செந்தில், மாநில நிர்வாகிகள் திருமார்பன், ஸ்ரீதர்,  மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன்,  திமுக மாநகர செயலாளர் கே.எஸ்.ராஜா, காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் ஏ.எஸ்.சந்திரசேகரன், சிபிஎம் மாநகர செயலாளர் ஆர். அமர்நாத், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.கே. பக்ரான், சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் வி.குளோப்,  மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரஹீம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் இஸ்மாயில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.