உடுமலை, ஜூன் 13- விவசாய விளைநிலங்களை தேசப் படுத்தி, விவசாயிகளையும் தாக்கி வரும் காட்டு விலங்குகள் கட்டுபடுத்தி, விவசாயிகளின் பயத்தை போக்கும் வகையில் வனத்துறையினர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என விவசா யிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
திருப்பூர் மாவட்டம், உடுமலை சுற்றுவட்டார மலைப்பகுதியில் வறட்சி ஏற்பட்ட நிலையில் காட்டு விலங்குகள் உணவு மற்றும் குடிநீர் தேவைகளுக்கு மலை அடிவார பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளது. சில வாரங்களாக காட்டு யானைகள் தென்னை மரங்களை சேதப்படுத்தி, விவசாயிகளை அச்சத் தில் ஆழ்த்தி உள்ளது. இதன் ஒரு பகுதி யாக ஜல்லிபட்டி கொங்குரர் குட்டை, பொன்லாமன் சோலை, அமராவதி உள்ளிட்ட பகுதியில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் மற்றும் ஆழ்குழாய் கிணற்றில் உள்ள குழாய் களை காட்டு யானைகள் சேதப்படுத்தி உள்ளது. ஏற்கனவே காட்டுப்பன்றிகள் மலை அடிவார பகுதியில் இருந்து பல கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் குடிமங்கலம் ஒன்றியப்பகுதி விளை நிலங்கள் மற்றும் விவசாயிகளை தாக்கி வருவது முடிவுக்கு வராத நிலையில் தற்போது காட்டு யானை களும் விளைநிலங்ளை சேதப்படுத்தி வருகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறு கையில், வனப்பகுதியில் வன விலங்குகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு கிடைப்பதை வனத்துறையினர் உறுதி செய்ய வேண்டும். விலங்குகள் ஊருக்குள் வரா முடியாத வகையில் தடுப்பு வேலி அல்லது அகலிகள் அமைத்திட வேண்டும். வன விலங்கு களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் தென்னை மரங்கள், விளை பயிர்களுக்கு உரிய இழப்பீடுகளை உரிய நேரத்தில் வழங்க வேண்டும், என்றனர்.