districts

img

சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

ஈரோடு, ஜூன் 6-  சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்தை கண் டித்து பொதுமக்கள் காலி குடங்களு டன் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாநகராட்சி, 44 ஆவது வார் டுக்குட்பட்ட பழையபூந்துறை சாலை,  ஓடைப்பள்ளம் பகுதியில் 200க்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்பட வில்லை என கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வியாழ னன்று காலை குடங்களுடன் ஈரோடு காந்திஜி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை யறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஈரோடு நகர காவல் நிலைய ஆய்வாளர் பிரேமா  மற்றும் மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகவடிவு, ஈரோடு வட்டாட்சியர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி  3 ஆம் மண்டலத் தலைவர் சசிக்குமார்  ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதில், எங்கள் பகுதியில் கடந்த ஒரு வாரமாக சீரான குடிநீர் விநியோ கம் செய்யப்படவில்லை. இதுதொடர் பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் பல  முறை புகார் அளித்தும் நடவடிக்கை  எடுக்கவில்லை.

மேலும், இங்கு ஒரே  ஒரு பொதுக்கழிப்பிடம் மட்டுமே உள் ளது. கூடுதல் கழிப்பிடம் அமைத்து  கொடுக்க வேண்டும் என்று பொது மக்கள் தெரிவித்தனர்.அதற்குப்  பதிலளித்த மண்டலத்தலைவர் மற்றும் அலுவலர்கள், ஓடைப்பள்ளம் பகுதி யில் உள்ள குடிநீர் பம்ப் செய்யும் மின்  மோட்டார் பழுதாகி உள்ளது. இதனால்,  சீரான குடிநீர் வழங்க முடியாமல் உள் ளது.

பழுது சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக குடி நீர் வழங்கப்படும். கூடுதல் கழிப்பிடம்  அமைப்பது குறித்து மாநகராட்சியில் பேசி உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர். இதனையேற்று, அனைவரும் கலைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி சார்பில் ஓடைப் பள்ளம் பகுதி பொதுமக்களுக்கு டிராக்டர் மூலம் குடிநீர் விநியோ கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.