court

img

டாஸ்மாக் முற்றாக மூடப்படுமா? உயர்நீதிமன்றம் இன்று விசாரணை....

மதுரை:
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூட உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் முறையீடு செய்தார். அந்த முறையீட்டில், தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில், நோய் பரவலைத் தடுப்பதற்கு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூட உத்தரவிட வேண்டும் என அவர் தெரிவித்தார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிர்வாக நீதிபதி சிவஞானம், நீதிபதி ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த முறையீடு செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்தால் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

;