சென்னை:
மாமல்லபுரத்தில் 2013 ஏப்ரல் 25 அன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற சித்திரை திருவிழாதொடர்பான வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தொடர்ந்து ஆஜராகாததால் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், நிர்வாகிகள் ஏ.கே.மூர்த்தி, கோ.க.மணி, கணேசன், அரசகுமார், நாகராஜ் ஆகிய ஆறு பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் மன்றநடுவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.