court

img

நீரின் தரத்தைப் பாதுகாக்க எந்த சமரசமும் கூடாது..... நதிகளை மாசுபடுத்தும் ஆலைகளை இடமாற்றுவது குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்க வேண்டும்.... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு....

சென்னை:
ஆலைக் கழிவுகளால் நதிகள் மாசடைவதை   தடுக்கவும்  நதிகளில் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை இடமாற்றம் செய்வது குறித்தும்  நிபுணர் குழுஅமைக்க வேண்டும் என்று தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள நதிகளில் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை இடமாற்றம் செய்வது குறித்தும், கழிவுநீர் வெளியேற்றுவதை எப்படி தடுப்பது என்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்குவதற்காக நிபுணர் குழுவை அமைக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நதியின் துணை நதிகளில் ஒன்றான அமராவதி நதி பாயும் கரூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளால் மாசடைவதாகக் கூறி, தனசேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.அவர் தாக்கல் செய்த மனுவில், தொழிற்சாலைகளால் மாசடைந்த அமராவதி நதி நீர், குடிநீராகவோ, விவசாயத்துக்கோ பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. நிலத்தடி நீரும்பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித் திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதிசெந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கியஅமர்வு கூறுகையில், நதிகள் மாசடைவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை என்றும்  நதிகளில் தொழிற்சாலைகளின் கழிவுகளைக் கொட்டுவதையும், கழிவுநீர் வெளியேற்றுவதையும் தடுப்பது குறித்து அரசு உறுதி செய்ய வேண்டும்.  

கடைமடை பகுதி மக்களும் நதி நீரைப் பயன்படுத்தும் வகையில், அதன் தரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் நதி நீர் மாசடையும் போது, நிலத்தடி நீரும் பயன்படுத்தத் தகுதியற்றதாகி விடுகிறது. நீரின் தரத்தைப் பாதுகாப்பதில் அரசு எந்த சமரசமும் செய்துகொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தினர்.மேலும் கூவம் நதி மீது கட்டப் பட்டுள்ள நேப்பியர் பாலத்தின் மீது ஏசிகாரில் செல்லும்போது கூட துர்நாற்றம்வீசுவதாக தலைமை நீதிபதி தெரிவித்தார். தமிழகம் முழுவதும் உள்ள நதிகளில் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை இடமாற்றம் செய்வது குறித்தும், கழிவுநீர் வெளியேற்றுவதை எப்படித் தடுப்பது என்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்குவதற்காக நிபுணர் குழுவை அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.  வழக்கின் விசாரணையை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.

;