court

img

ஆல்-பாஸ் உத்தரவை ரத்து செய்ய முடியாது : நீதிமன்றம்...

சென்னை:
 தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, 9 ஆம்வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சிபெற்றதாக அறிவித்துதமிழகப் பள்ளிக்கல்வித்துறை கடந்த பிப்ரவரி 25 ஆம்தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமைநீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, பொதுத் தேர்வு நடத்தவில்லை என்றாலும், பள்ளிகள் அளவில் தேர்வு நடத்தப்பட வேண்டும். அப்போது தான் 11 ஆம் வகுப்பில் சேரும்போது மாணவர் விரும்பும் பாடத்திட்டத்தில் சேர்க்கை வழங்க முடியும். தேர்வுகள் ரத்து செய்வது தொடர்பாக எந்த கலந்தாலோசனையும் மேற்கொள்ளவில்லை. தேர்தலைகருத்தில் கொண்டு இந்தஅறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், பொதுநலன் சார்ந்த விஷயங்களில் அதிகாரிகள் உரிய ஆலோசனைகளுக்குப் பிறகே முடிவுகள்எடுப்பர். எந்தக் கலந்தாலோசனையும் மேற்கொள்ளவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது. அரசாணையை ரத்து செய்ய முடியாது.அதேசமயம், 10 ஆம் வகுப்பில் இருந்து 11 ஆம் வகுப்புக்குச் செல்லும் மாணவர்கள், விருப்பப் பாடத்தைத் தேர்வு செய்யும் வகையில், அவர்களின் தகுதியைக் கண்டறியப் பள்ளிகள், தனித் தேர்வு நடத்திக் கொள்ளலாம். இது சம்பந்தமாகப் பள்ளிக் கல்வித்துறை உரியவழிகாட்டு விதிகளை அறிவிக்க வேண்டும் என்று எனவும்உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

;