court

img

பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவுக்கு ஜூலை 1 வரை காவல்... நீதிமன்றம் உத்தரவு...

செங்கல்பட்டு:
பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் போலிச்சாமியார் சிவசங்கர்பாபாவை ஜூலை மாதம் 1 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் குற்றச்சாட்டு எழுந்தவுடன் தப்பி ஓடிய சிவசங்கர் பாபாவை தமிழ்நாடு சிபிசிஐடி காவல்துறையினர் புதனன்று  தில்லியில் கைது செய்து விமானத்தில் சென்னைக்குஅழைத்துவந்தனர்.  வியாழனன்று (ஜூன் 17) செங்கல்பட்டு மாவட்ட போக்சோ சிறப்புநீதிமன்றத்தில்  நீதிபதி அம்பிகா (பொறுப்பு)முன்பு  ஆஜர்படுத்தினர். ஜூலை 1 ஆம்தேதிவரை சிவசங்கர் பாபாவை நீதிமன்ற காவலில்சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிமன்ற வளாகத்தில்ஆர்ப்பாட்டம்
இதற்கிடையே செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிவசங்கர் பாபா மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீதிமன்றவளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் வாலிபர் சங்க மாநில துணைச்செயலாளர் மா.ப.நந்தன், மாவட்டச் செயலாளர் கலையரசி, இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் தமிழ் பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

;