court

img

கீழடியில் பழங்கால நாகரீக நூலகம்... மதுரையில் கலைஞர் நூலகம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு....

 மதுரை:
மதுரையில் கலைஞர் நூலகம்அமைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது.

மதுரை, எம்.கே.புரத்தைச் சேர்ந்தவெங்கடேஷன் சென்னை உயர்நீதிமன்ற  மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “2017-18-ஆம் ஆண்டு சட்டசபையில் தமிழகத்தில்தனித்தன்மை வாய்ந்த நூலகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சிந்து சமவெளி நாகரீகம்   பழமையான நாகரீகம். கீழடி போன்ற தமிழர்களின் நாகரீகத்தைப் பறைசாற்றும் விதமாக நூலகங்கள் அமைக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.அறிவிப்பு வெளியாகி மூன்றாண்டுகளுக்கு  மேலாகியும் இதுவரைஎந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. துறை சார்பில் அறிவிக்கப்பட்டபடி தமிழகத்தில் தனித்தன்மை வாய்ந்த நூலகம் மற்றும் காட்சியகங்கள் அமைக்க உத்தரவிட வேண்டும்”  எனக் கூறியிருந்தார்.இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் சனிக்கிழமை விசாரித்தனர்.  அரசுத் தரப்பில்,  “ஏழு சிறப்பு நூலகங்கள் பயன்பாட்டில் உள்ளன. தமிழ் இசை,நடனம் ஆகியவைக்கு தஞ்சாவூரிலும், நாட்டுப்புறக் கலை நூலகம் மதுரையிலும், தமிழ் மருத்துவ நூலகம் திருநெல்வேலியிலும், பழங்குடி கலாச்சார நூலகம் நீலகிரியிலும், கணிதம் மற்றும் அறிவியல் நூலகம்திருச்சிராப்பள்ளியிலும், அச்சுக்கலை நூலகம் சென்னையிலும், வானியல் நூலகம் கோயம்புத்தூரிலும் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. கீழடியில் தொடர்ந்து அகழாய்வு நடப்பதால் பழமையான நாகரீக நூலகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது எனக் கூறப்பட்டது.

 இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுவை முடித்து வைத்தனர்.  அப்போது நீதிபதிகள், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழகஅரசு மதுரையில் ரூ.70 கோடியில் லைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் எனக் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. இதனால், தென் மாவட்ட மக்கள் அதிகம் பயனடைவர். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு பெருமளவு பயன்தரும். அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குள் நுழைந்தால் ஒரு நாள் போதாது. அதைப் போல மதுரையில் அமையப்போகும் நூலகம் இருக்கும். அரசுக்கு எங்களது பாராட்டுக்கள்" எனக் கூறினர்.

;