court

img

புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டு காப்பீடு கட்டாயம் இல்லை.....

சென்னை:
 புதிய வாகனங்களுக்கு  செப்டம்பர் 1 ஆம் தேதி முதல், பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயம் என்று பிறப்பிக்கப் பட்ட உத்தரவை திரும்பப் பெறுவதாகசென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள் ளது. 

ஒகேனக்கல்லில் நிகழ்ந்த சாலை விபத்தில் மரணமடைந்த சடையப்பன் என்பவரது குடும்பத்தினர் இழப்பீடு கேட்டுஈரோடு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  சடையப்பன்  குடும்பத்திற்கு ரூ. 14லட்சத்து 65 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பாயம் உத்தர விட்டது. இதனை எதிர்த்து நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கின் மீது விசாரணை மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், செப்டம்பர் 1 ஆம்தேதி முதல் விற்கப்படும் அனைத்து புதியவாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் வாகன  உரிமை யாளர், ஓட்டுநர், பயணி என்று அனைவரையும் உள்ளடக்கும் வகையில் 5 ஆண்டுகளுக்கு காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்று உத்தர விட்டிருந்தார். இதைத்தொடர்ந்து  பொதுக் காப்பீட்டு மன்றம் சார்பில் நீதிபதி வைத்தியநாதன் முன்பு தாக்கல் செய்யப்பட்ட மெமோவில்,  இந்திய காப்பீடு ஒழுங்குமுறை-மேம்பாட்டு ஆணையத்தின் ஒப்புதல் பெற்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப மென்பொருளில் உரிய மாற்றம்செய்ய 90 நாட்கள் அவகாசம்வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இதனையேற்ற  நீதிபதி, செப்டம்பர் 1 முதல் 5 ஆண்டுகளுக்கான கட்டாய வாகன காப்பீடு உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் செப்டம்பர் 14 அன்றுமீண்டும் நடைபெற்ற  வழக்கின் விசாரணை யில், தற்போதைய சூழ்நிலையில் அனைத்து வாகனங்களுக்கும் காப்பீடு வழங்குவது சாத்தியமில்லை என காப்பீட்டு நிறுவனங்கள் அமைப்பின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுகொண்ட நீதிபதி, பம்பர் டு பம்பர் அடிப்படையில் காப்பீடு செய்வது கட்டாயம் என்ற உத்தரவை வாபஸ் பெறுவதாகவும் போக்குவரத்துத்துறை இதற்கென பிறப்பித்த சுற்றறிக்கையும் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.இந்த திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவதற்கான சூழல் இல்லை என்றும், பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உரிய திருத்தங்களை அரசு கொண்டு வரும் என்று நம்பிக்கை உள்ள தாகவும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

;