court

img

கொரோனாவால் பலியானோர் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் வழங்க முடியாது.... ஒன்றிய பாஜக அரசு கைவிரிப்பு...

புதுதில்லி:
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் கொடுக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா  நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க சம்பந்தப்பட்டதுறை களை அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி  உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் மீது விசாரணை மேற்கொண்ட  நீதிபதிகள், இதுதொடர்பாக பதிலளிக்கும்படி ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர். ஒன்றிய அரசு 183 பக்கங்கள் கொண்ட பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. அதில்,  கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க முடியாது.  

பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-இன் கீழ் குறிப்பிடப்பட்ட 12 பேரிடர்களுக்கு மாநில பேரிடர் மீட்பு நிதியின் கீழ் இழப்பீடுகள் வழங்கப்படுகின்றன.  இந்தப் பெருந்தொற்றால் 3.85 லட்சத்துக்கும் மேலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். கடந்த காலங்களில் எந்தவொரு பேரிடரிலும் இல்லாத வகையில் பெருந்தொற்று பலி எண்ணிக்கை அதிகளவில் உள்ளன.  எனவே ஒவ்வொரு நபருக்கும் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமானால், மாநில பேரிடர் மீட்பு நிதி முழுவதையும் பயன்படுத்த வேண்டியதாகிவிடும். இழப்பீடு வழங்குவதன் மூலம் கூடுதல் நிதிச்சுமையால், சுகாதாரம் மற்றும் நலத்திட்டங்களுக்கான நிதி குறையும்” என்று தெரிவித்துள்ளது.

;