நீட் முறைகேடுகளால் பயனடைந்தவர்கள் யார் என்பதை கண்டறிய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, 67 பேர் முழு மதிப்பெண் பெற்றது எப்படி? நீட் தேர்வு வினாத்தாள்கள் எப்போது தயாரிக்கப்படுகின்றது? அது எப்போது அச்சிடுவதற்காக அனுப்பி வைக்கப்படுகின்றது? எப்போது அச்சிடப்படுகின்றது? அச்சிடப்பட்ட பிறகு எப்போது அது தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது? என ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வியெழுப்பியுள்ளது.
சமூக ஊடகங்களில் நீட் வினாத்தாள் கசிந்தது உண்மை என்றால் இந்த வினாத்தாள் கசிவு என்பது மிகப்பெரியதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து
whatsapp telegram போன்றவற்றில் இவை கசிந்திருக்கிறது என்றால் அது காட்டு தீ போல பரவி இருக்கும் இது 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் வாழ்க்கை சார்ந்த விவகாரம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்
நீட் தேர்வில் முறைகேடு நடட்ந்தது உண்மை அதை ஒப்புகொள்ள வேண்டும், தவறு செய்தவர்களை கண்டறியாவிட்டால் மறு தேர்வு நடத்த உத்தரவிடப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளார்