court

img

அதிமுக அரசு கூறியதால்தான் சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டன - உச்சநீதிமன்றத்தில் அப்போலோ பதில்

அப்போதைய அரசு கூறியதால்தான் மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமராக்களை அகற்றினோம் என உச்சநீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக விலக்கு கோரி அப்போலோ மருத்துவமனை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது அப்போலோ மருத்துவமனை தரப்பில், “ஆறுமுகசாமி ஆணையத்தில் ஒட்டுமொத்த அணுகுமுறையும் தவறாக உள்ளது. மருத்துவ ரீதியிலான விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் மேற்கொள்ளவில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆணையத்தின் மருத்துவ வல்லுநர்கள் யாரும் இடம்பெறாததால், மருத்துவ ரீதியிலான விவரங்களை எப்படி தெரிவிக்க முடியும்.

அரசியல் தலைவர்கள் பலர் விசாரிக்கப்படாமல் இருக்கும்பட்சத்தில் மருத்துவர்களை மட்டும் விசாரிப்பது ஒருதலைப்பட்சமானது.
ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லாததால் அங்கு ஆஜராக மாட்டோம். மருத்துவர்கள் அடங்கிய வேறு குழு முன்பு விசாரணைக்கு ஆஜராக தயாராக உள்ளோம்.

மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்கு வந்தபோது அப்போதைய அரசு கூறியதால்தான் மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமராக்களை அகற்றினோம். என்று உச்சநீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;