court

img

விடுதலையை எதிர்பார்க்கும் பேரறிவாளனின் 30 ஆண்டுகால காத்திருப்பு.... உச்சநீதிமன்றத்தில் இன்று இறுதி விசாரணை...

புதுதில்லி:
பேரறிவாளன் வழக்கில் இறுதி விசாரணை புதனன்று நடைபெற உள்ள நிலையில் அவர் விடுதலை ஆவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில்இறுதி விசாரணை புதனன்று நடைபெற உள்ளது. உச்சநீதிமன்றமே தனதுசிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தன்னை விடுவிக்கக் கோரி பேரறிவாளன் கடந்த நவம்பரில் மனு தாக்கல்செய்தார். அரசியல் சட்ட பிரிவு 161-ன் படி பேரறிவாளன் விடுதலை பற்றி, மாநில அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் கூறியது. பேரறிவாளன் விடுதலை குறித்து மாநில அரசோ, ஆளுநரோ முடிவு செய்ய முடியாது என மத்திய அரசு திடீரென வாதம் செய்துள்ளது.

மத்திய அரசின் வாதத்துக்கு தமிழக வழக்கறிஞர் பாலாஜி ஸ்ரீனிவாசன் எந்தபதிலும் கூறவில்லை என கூறப்படு கிறது. தற்போதாவது மத்திய அரசின் வாதத்துக்கு தக்க பதிலை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தருமா என எதிர்பார்க்கப்படுகிறது.விடுதலை கோரும் பேரறிவாளன் மனுவை மாநில அரசு பரிசீலிக்கலாம் என்று ரஞ்சன் கோகோய்தலைமை நீதிபதியாக இருந்த போதே உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு 2018, செப்டம்பர் 19-ம் தேதியே பரிந்துரைத்து விட்டதாக மாநில அரசு தெரிவித்தது.இந்நிலையில், மாநில அரசு தன் இறையாண்மையை நிலைநாட்டும் வகையில் வாதங்களை முன் வைக்குமா எனவும், விடுதலை யை எதிர்பார்க்கும் பேரறிவாளனின் 30 ஆண்டுகால காத்திருப்பு நாளை முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

;