court

img

தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு...

புதுதில்லி: 
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.  இதனை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த அபிஷ்குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில்  மனுத் தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர். இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.

;