court

img

சாமானிய மக்கள் மீதான காவல்துறை கொடுமைகளை விசாரிக்க சிறப்புக்குழு

புதுதில்லி,அக்.2- சாமானிய மக்களுக்கு காவல்துறையினர் மற்றும் அதிகாரிகளால் நிகழ்த்தப்படும் கொடு மைகள் குறித்து  அளி்க்கும் புகார்களை விசா ரிக்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தலை மையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்க ஆதரவாக உள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தார். சத்தீஸ்கர் மாநிலத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட கூடுதல் டிஜிபி குர்ஜிந்தர் பால் சிங் தன்னை கைது செய்வதிலிருந்து பாதுகாப்பு அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். கூடுதல் டிஜிபி மீது தேசத்துரோக வழக்கு, குற்றச்சதி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கூடுதல் டிஜிபி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமையன்று உச்சநீதி மன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா  தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது.

அப்போது சத்தீஸ்கர் அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி , ராகேஷ் திரிவேதியும், கூடுதல் டிஜிபி தரப்பில் விகாஸ் சிங், எப்.எஸ். நாரிமனும் ஆஜராகினர். இதில், தேசத்துரோக வழக்கிலிருந்து மட்டும் கூடுதல் டிஜிபியை கைது செய்ய தலைமை நீதிபதி விலக்கு அளித்தார். அப்போது தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறுகையில் “ அதிகாரிகள் குறிப்பாக காவல்துறையினர் செய்யும் கொடுமைகளை நினைத்து நாங்கள் மிகவும் வேதனையாக இருக்கிறோம். காவல்துறையினர்  செய்யும் கொடுமைகள் குறித்து சாமானிய மக்கள் அளிக்கும் புகார்களை விசாரிக்க மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தலைமையில் விசாரணைக் குழு அமைக்க நான் ஆதரவாக இருந்தேன். சமீபத்தில் நீதிமன்றம் வழக்கு ஒன்றில்  சுட்டிக்காட்டியது. அதாவது, ஒரு வழக்கில் ஒரு அரசாங்கத்திடம் இருந்து   தண்டனை பெறாமல் தப்பிக்கும் காவல்துறை அதிகாரிகள், ஆட்சி மாற்றம் ஏற்படும்போது வட்டியுடன் திருப்பிச் செலுத்த நேரிடும். இதற்கு முந்தைய காலங்களில் எதிர்க்கட்சி ஆட்சிக்கு வரும்போது ஆளும்கட்சிக்கு ஆதர வாக இருந்த காவல்துறை  அதிகாரிகள் பந்தாடப்படுவார்கள்.  இது வேதனைக் குரியதாகும். ஒரு அரசியல் கட்சி ஆட்சிக்கு வரும்போது, காவல்துறை  அதிகாரிகள் ஒரு கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள்,

அடுத்த தேர்தலில் புதிய கட்சி ஆட்சிக்கு வரும்போது, கடந்த ஆட்சிக்கு விசவாசமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக் கப்படுகிறது. இந்த புதிய போக்கு  தடுத்து நிறுத்தப்படுவது அவசியம்”என்று தெரி வித்தார். உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் ஒரு ஹோட்டலில் காவல்துறையினர் சோதனை க்குச் சென்று, வர்த்தகர் ஒருவர் உயிரிழந்த சம்ப வம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் வணிகர்களான  தந்தை ,மகனை அடித்துக் கொன்றதாக 9 காவலர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது ஆகியவற்றை சுட்டிக்காட்டி, தலைமை நீதிபதி இக்கருத்தை  தெரிவித்தார்.

;