court

img

முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார்.... தீய சக்திகளின் தூண்டுதலாம்... வழக்கை முடித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு....

புதுதில்லி:
உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பெண் ஒருவர்கொடுத்த பாலியல் புகாரில் எந்தவித முகாந்திரமும் இல்லை என்றும் தீய சக்திகளின் தூண்டுதலால் புகார் அளிக்கப்பட்ட தாகவும் கூறி, வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமைநீதிபதியும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் கோகாய் மீது அவரது அலுவலகத்தில் பணியாற்றிய 35 வயது பெண் ஊழியர் ஒருவர் பாலியல்துன்புறுத்தலுக்கு ஆளானதாக நீதிமன்றத்தின் 22 நீதிபதிகளுக்கு கடந்த 2019 ஏப்ரல் 19ஆம் தேதி புகார் கடிதம் ஒன்றை அனுப்பினார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிந்த உச்சநீதிமன்றம், அதுகுறித்து விசாரிக்க தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் மூன்று நீதிபதிகள் அடங்கிய சிறப்பு உள்விவகார விசாரணை குழுவை அமைத்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக  விசாரணை நடத்தப்பட்டது. இதன்பின்னர்  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வுவழங்கிய தீர்ப்பில்,  இந்த பாலியல் புகார் என்பது தீய சக்திகளால் தூண்டி விடப்பட்டு இருக்கலாம் என புலனாய்வு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் புகார் தொடர்பான எந்த ஒரு சரியான ஆதாரத்தையும் குற்றம்சாட்டிய பெண் இதுதொடர்பான வழக்கு முடியும் வரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. அதனால் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதானபாலியல் குற்றச்சாட்டில் எந்தவித அடிப்படை முகாந்திரமும் கிடையாது எனக்கூறி, நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைக்கிறது” என்று தீர்ப்பளித்தனர்.

;