court

img

ஆக்சிஜன், தடுப்பூசி கிடைப்பதற்கு தேசிய ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்கிடுக....மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு....

புதுதில்லி:
கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன், தடுப்பூசி,மருந்துகள் ஆகியவை கிடைப்பது குறித்தும் அதுதொடர்பாகபிறப்பிக்கப்படும் பொதுமுடக்கம் குறித்தும் தேசிய அளவிலான ஒருங்கிணைந்த திட்டம் உருவாக்குவது தொடர்பானவிரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. 

நாட்டின் பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் சிலிண்டர், மருந்துகள் தட்டுப்பாடு தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.விசாரணையின் போது, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கூறுகையில், ‘ நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையின் காரணமாக நோயாளிகள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.  அதிகப்படியான உயிரிழப்புகளும் தொடர்ந்துஏற்பட்டு வருகிறது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றமும் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. இதில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பது, அத்தியாவசிய மருந்து பொருட்கள் கிடைப்பது, அனைத்துகுடிமக்களுக்கும் தடுப்பூசி கிடைப்பது மற்றும் மாநில அரசுகள் அமல்படுத்தும் பொதுமுடக்கம் ஆகிய நான்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக நீதிமன்றம் கருதுகிறது.

இதுதொடர்பாக தேசிய அளவிலான ஒருங்கிணைந்த திட்டம் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. அதனால் அதுகுறித்த முழு அறிக்கை கொண்ட திட்டத்துடன் நாளை(இன்று) மத்திய அரசு வர வேண்டும் என நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பிக்கிறது.இதைத்தவிர நாடு  முழுவதிலும்உள்ள ஆறு உயர்நீதிமன்றங்களில் ஆக்சிஜன், படுக்கை வசதி பற்றாக்குறை மற்றும் அத்தியாவசிய மருந்துகள் இல்லாமை ஆகியவை குறித்து தனித்தனியாக விசாரிக்கப்பட்டு வரப்படுகிறது. இதில் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டு உயர்நீதிமன்றங்கள் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும், பொதுப் பிரச்சனையாக இருக்கக்கூடிய இந்த விவகாரத்தில் சில குழப்பங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே இவற்றை மொத்தமாக நாங்களே விசாரிக்கவுள்ளோம் என்று  தெரிவித்தனர். இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்திற்கு உதவுவதற்காக மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே என்பவரை நியமித்தனர்.

;