court

img

தடுப்பூசி செலுத்துவதில் குளறுபடி... மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி....

புதுதில்லி:
தடுப்பூசி வாங்குவது, விலை நிர்ணயம் செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நிலவுகிறது என அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம் இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தர விட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. ஆனால், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றனர். மேலும், இந்திய மக்களுக்கு கொடுக்காமல், வெளிநாடுகளுக்கு இலவசமாக வழங்கியது ஏன் என்று கேள்வியும் எழுப்பி உள்ளனர்.இந்நிலையில், நாட்டின் கொரோனாபரவலை தடுக்க மத்திய அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தக் கோரியவழக்கை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது.இந்த வழக்கு திங்களன்று மீண்டும்விசாரணைக்கு வந்தது. விசாரணை யின்போது நீதிபதிகள் கூறுகையில் ‘‘44 வயதுக்கு மேற்பட்டோருக்கு மத்திய அரசு தடுப்பூசியை வாங்கி விநியோகம் செய்கிறது. ஆனால் 18 வயது முதல் 44வயது கொண்டவர்களுக்கு தடுப்பூசியில் 50 சதவீதத்தை மத்திய அரசு வாங்கிவிநியோகிக்கிறது.

மீதமுள்ள 50 சதவீதத்தை தனியார்மருத்துவமனைகள் வசம் ஒப்படைத்து விட்டது. மாநில அரசு கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு விலை நிர்ணயம் செய்கிறது. ஆனால் தனியார் மருத்துவமனைகளுக்கு வேறு ஒரு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதற்கு 44 வயதுக்கு அதிகமானோர் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என மத்திய அரசு விளக்கமளிக்கிறது.ஆனால் கொரோனா இரண்டாவதுஅலையில் அதிகமாக 44 வயதுக்குகுறைவானவர்களும் பாதிக்கப் பட்டுள்ளனர். தடுப்பூசி வாங்குவது, விலை நிர்ணயம் செய்வதில் பல்வேறுகுளறுபடிகள் நிலவுகிறது. அதுபோலவே பற்றாக்குறை தொடர்பாகவும்தொடர்ந்து தகவல்கள் வருகின்றன.இந்த குளறுபடிகளை களைந்து நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டஅனைவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசிசெலுத்த வேண்டும்’’ என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

;