court

img

அதிமுக பொதுக்குழு மீண்டும் நடக்குமா? உயர்நீதிமன்றம் இன்று விசாரணை

சென்னை,ஜூலை 5- அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வற்புறுத்தினர். ஆனால் அதை  ஓ.பன்னீர் செல்வமும் அவரது  ஆதரவாளர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் பிரச்சனை எழுந்தது. கடந்த மாதம் 23 ஆம் தேதி  பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில்  ஒற்றை தலைமை பற்றி தீர்மானம்  நிறைவேற்ற முடிவு செய்திருந்த னர். இதனால் ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தீர்ப்பு சாதகமாக வராததால் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு வழக்கை விடிய  விடிய விசாரித்த உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் பொதுக்குழுவில் ஏற்கனவே விவாதிக்கப்பட்ட 23 தீர்மானங்களை மட்டும் நிறை வேற்றலாம். புதிய தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றக்கூடாது என்று உத்தரவிட்டது. பரபரப்பான சூழ்நிலையில்  நடந்த அந்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை பற்றி தீர்மானம் கொண்டு வர  முடியாததால் ஒட்டுமொத்த மாக தீர்மானங்கள் நிராகரிக்கப் பட்டது. அதற்கு பதிலாக ஒற்றை  தலைமை பற்றி விவாதிக்க மீண்டும் 11 ஆம் தேதி பொதுக்குழு  கூட்டம் கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனவே 11 ஆம் தேதி நடை பெறும் பொதுக்குழுவில் ஒற்றை  தலைமை பற்றி முடிவு செய்ய வும் இடைக்கால பொதுச் செயலா ளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்யவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் 23 ஆம்  தேதி நடைபெற்ற பொதுக்குழு வில் உயர்நீதிமன்ற உத்தரவை  மீறிவிட்டதாக கூறி ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த நீதிமன்ற  அவமதிப்பு வழக்கு விசார ணைக்கு வந்தது. அப்போது 11  ஆம் தேதி நடைபெறும் பொதுக் குழுவுக்கு தடை கேட்டும் முறையிட்டனர்.

ஆனால் பொதுக்குழுவுக்கு தடை கேட்டு டிவிசன் பெஞ்சில் வழக்கு தொடர முடியாது. சம்பந்தப்பட்ட தனி நீதிபதியிடம் முறையிடலாம் என்று நீதிபதி கள் அறிவுறுத்தினார்கள். இந்த நெருக்கடிகளுக்கு இடையே யும் 11 ஆம் தேதி பொதுக்குழுவை  திட்டமிட்டபடி நடத்துவதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி பழனி சாமி தரப்பினர் மும்முரமாக செய்து வருகிறார்கள். அதேநேரம் சட்ட நடவடிக்கை மூலம் அதை முடக்குவதற்கான வேலைகளில் ஓ.பி.எஸ். தரப்பினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். பொதுக்குழு வுக்கு தடை கேட்டு தனி நீதி பதியை அணுகுவது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் விவாதித்தார். அப்போது மீண்டும் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டது. அதன்படி நீதிபதி கிருஷ்ணன்  ராமசாமி முன்பு பொதுக்குழு வுக்கு தடை கேட்டு வழக்கு தாக்கல் செய்தனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டே ஓ.பி.எஸ்.  தனது மனுவை தாக்கல் செய் துள்ளார். அந்த மனுவில் கூறியி ருப்பதாவது:- கட்சியின் ஒருங்கி ணைப்பாளர் என்ற முறையில் 11 ஆம் தேதி பொதுக்குழுவை கூட்டுவதற்கு என்னிடம் அனுமதி பெறவில்லை. பொதுக்குழு கூட்டம் தொடர்பாக எனக்கு ஜூலை 4 ஆம் தேதி மாலையில்  தான் அழைப்பிதழ் கிடைத் துள்ளது. பொதுக்குழு கூட்டத்துக்கு 15 நாட்களுக்கு முன்பே அழைப்பு விடுக்க வேண்டும் ஆனால் 11 ஆம் தேதி பொதுக்குழு வுக்கு அழைப்பு விடுக்கப்பட் டுள்ளது. எனவே உரிய முறைப் படி கூட்டப்படாத இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்.  இவ்வாறு அந்த  மனுவில் கூறி உள்ளார். ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ஆஜரான உச்சநீதிமன்ற மூத்த  வழக்கறிஞர் குரு கிருஷ்ணகு மார், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார். அதை ஏற்று க்கொண்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி புதன்கிழமை (ஜூலை 6) விசாரிக்கப்படும் என்று அறி வித்தார். சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்கு விசாரணைக்கு வருவ தால் 11 ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு தடை  வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.