தி ஹேக், பிப்.16- மனித குலத்துக்கு எதிராக இவோ மொரேல்ஸ் செயல்பட்டார் என்பதற்கு எந்தவிதமான ஆதார மும் இல்லை என்று சர்வதேச குற்றவியல் நீதி மன்றம் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஆதரவோடு இயங்கி வந்த பொலி வியாவின் வலதுசாரி ஜனாதிபதி ஜீனைன் அரசுக்கு எதிராக மக்கள் பெருந்திரள் போராட்டங்களை நடத்தி வந்தனர். சர்வாதிகார ஆட்சியின் அடாவடி களால் முன்னாள் ஜனாதிபதியும், தனது இடது சாரிக் கொள்கைகளால் பொலிவியாவின் பொரு ளாதாரத்தை உயர்த்தியவருமான இவோ மொ ரேல்ஸ் அர்ஜெண்டினா, மெக்சிகோ ஆகிய நாடுக ளில் இருந்து செயல்பட்டு வந்தார். மீண்டும் இடது சாரிகளுக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்த பின்னரே அவர் நாடு திரும்பினார். ஜீனைனின் வலதுசாரி அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களில் ஆகஸ்டு 2020ல் நடந்த 12 நாட்கள் போராட்டம் பொலிவியாவையே அதிர வைத்தது. வலதுசாரி ஆட்சியாளர்களை மக்கள் தூக்கி எறிவார்கள் என்பதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன. இந்த போராட்டத்தை ஆத ரித்த இவோ மொரேல்ஸ் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வலதுசாரி அரசு வழக்கு தொடுத் தது.
அந்தப் போராட்டத்தின்போது அவசர மருந்து கள் எடுத்துச் செல்வதை தடுத்ததாகவும், அதனால் இந்த செயல்பாடு மனித குலத்துக்கு விரோதமான தாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கின் ஆவணங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது. அவற்றைப் பரிசீலித்த பின், ‘‘என்னு டைய அலுவலகத்தில் இருக்கும் ஆவணங்கள் மற்றும் தகவல்களை முழுவதுமாக, எந்தவிதப் பாரபட்சமும் இன்றி ஆய்வு செய்ததில், மனித குலத் துக்கு எதிராக எந்தவிதமான குற்றமும் செய்த தாகத் தெரியவில்லை’’ என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் கரீம்கான் தெரிவித்துள்ளார். பொது மக்கள் மீது ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும், மருந்துகளை ஏற்றி வந்த வாகனங்களை அனு மதிக்கும்படி மொரேல்ஸ் தொடர்ந்து ஆணையிட்டு வந்தார் என்றும் தலைமை வழக்கறிஞர் சுட்டிக் காட்டுகிறார். பொய்ப் பிரச்சாரத்தின் மீதான உண்மையின் வெற்றி என்று இவோ மொரேல்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டில் அமெரிக்க ஆதரவோடு கலகம் நடத்தப்பட்டு, ஜீனைன் தலைமையில் பொம்மை ஆட்சி ஒன்று ஓராண்டு காலத்திற்கு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.