court

img

மருத்துவப் படிப்பில் உள்ஒதுக்கீடு.... அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது....

புதுதில்லி:
தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவராகும் வாய்ப்பை ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள நீட் தேர்வு பறித்துள்ளது என்று தமிழ்நாட்டில் மாண வர்கள், மக்கள் மற்றும்மாணவர் அமைப்புகள் , அரசியல் கட்சிகள் இத்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர் போராட்டங்களை நடத்தின. இதைத்தொடர்ந்து   கடந்த அதிமுக ஆட்சியில்   அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில் சேர 7.5 சதவீதஇடஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு ஆளுநரும்  ஒப்புதல் வழங்கி, கடந்த ஆண்டு தமிழகத்தை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். இதேபோல், அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில்பயின்ற மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.

இந்த சூழலில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டையை சேர்ந்த ராஜஸ்ரீ என்ற பள்ளி மாணவிஉச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு ஜூலை 20 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்தனர். மேலும் மாணவி ராஜஸ்ரீ உயர்நீதி மன்றத்தில் இது தொடர்பாக முறையீடு செய்யுமாறு அவருக்கு அறிவுறுத்தி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

;