court

img

தமிழக மீனவர்கள் 4 பேர் கொலை.... இலங்கை கடற்படையினரைக் கைது செய்ய உத்தரவிடுக.... உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

புதுதில்லி:
கடந்த மாதம் தமிழக மீனவர்கள் 4 பேரை நடுக்கடலில் கொலை செய்த இலங்கைக்கடற்படையினரைக் கைது செய்ய உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த கடல்சார் மக்கள் நலச் சங்கமம் எனும் அமைப்பின் சார்பில்  தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், கடந்தமாதம் 21-ம் தேதி இந்தியக் கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல்கள்எடுக்கப்பட்டன. இலங்கைக் கடற்படையினர் அளித்த தகவலில், இலங்கைக் கடற்படையின் மீது மீனவர்கள் படகு மோதி கடலில்மூழ்கிவிட்டது என்றனர்.  கடல்சார் வளங்களைப் பயன்படுத்துவதிலும், கடல் எல்லையைத் தீர்மானிப்பதிலும் தொடர்ந்து சிக்கல்எழுந்து வருகிறது. தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவும், அவர்களின் உடைமை களைப் பாதுகாக்கவும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க உத்தரவிட வேண்டும்.தமிழக மீனவர்கள் 4 பேரைக் கொன்ற இலங்கைக் கடற்படையினரைக் கைது செய்ய உத்தரவிட வேண்டும். உயிரிழந்த தமிழக மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.கேரளக் கடற்பகுதியில் இந்திய மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலி கடற்படையினர் 2 பேரை  கேரளக் கடற்படையினர் கைது செய்யப்பட்டது மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

;