cinema

img

சிந்தனையிலும் வன்முறையை புகுத்தும் பாஜக: டி.எம். கிருஷ்ணா....

“இந்திய நாடு எங்களுக்கு மட்டுமே சொந்தமானது. அதிகாரம் அனைத்தும் எங்களிடமே இருக்க வேண்டும் என்கிற சித்தாந்த ரீதியில் செயல்பட்டு வரும் பாசிச பாஜக அரசு, மக்களைபயமுறுத்தி வன்முறை, அச்சத்தை ஏற்படுத்தி மக்கள் நல்லதைப் பற்றியே சிந்தித்துவிடக் கூடாது

என்ற கருத்தோட்டத்தில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. மக்களது சிந்தனையை முடக்கி வைத்துள்ள பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும்உடனடியாக தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்படுவார்கள்” என்றார்.நாட்டில் அரசியல் சிந்தனை எத்தகையதாகவும் இருக்கலாம். அது இயற்கையானது. ஜனநாயகத்தில் அவர்களதுஉரிமை, சிந்தனை அது. ஸ்டான் சுவாமியின் மரணத்திற்குப் பிறகு முகநூல், இணையதளத்தில் வரும்கருத்துகளை படிக்கும் போது வருத்தப்படக் கூடிய அளவுக்கு உள்ளது. பாஜக ஆட்சியில் இருக்கும் தற்போதைய சூழலை பார்க்கும்போது, ஒருவித பயமும் வன்முறையையும் நம்மை சூழ்ந்து கொண்டுள்ளது. அதிலும் மக்களின் சிந்தனையில் வன்முறையை திணித்துவருகிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

;