cinema

img

நான், ‘கோ பேக் மோடி’ என்று சொல்வதை தடுக்க முடியாது... பாஜக-வினருக்கு நடிகை ஓவியா பதிலடி....

புதுதில்லி:
நடிகை ஓவியா, தனது மனத்தில் பட்ட கருத்தை பளிச்சென்று சொல்லி விடுவார். அவரின் துணிச்சலான பேச்சு மற்றும் நடவடிக்கைகள் காரணமாகவே அவருக்கு சமூக வலைதளங்களில் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் சென்னை வந்தபோது, தமிழக மக்களுடன் சேர்ந்து, ஓவியாவும் “மோடியே திரும்பிப் போ..!” (#GoBackModi) என்று டுவிட்டரில் பதிவிட்டார். இது பெரும் வைரலானது. ஓவியாவின் இந்த டுவீட்டை ஆயிரக்கணக்கானோர் ரீ-டுவீட் செய்தனர்.

புள்ளிவிவரத்துடன் சொன்னால், ஓவியாவின் ‘கோ பேக் மோடி’ டுவீட்டுக்கு 61 ஆயிரம் லைக்குகளும் 20 ஆயிரம் ரீ-டுவீட்களும், 6 ஆயிரம் கமெண்ட்டுகளும் குவிந்தன.ஓவியா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று காவல்துறையில் புகார் அளிக்கும் அளவிற்கு அவரின் டுவீட், பாஜக-வினரை ஒருவழி செய்து விட்டது. வழக்கம்போல ஓவியாவை வசைபாடும் வேலையில் இறங்கிய பாஜகவினர், இப்போதுவரை தொடர்ந்து ஓவியாவை மிரட்டியும், திட்டியும் வருகின்றனர்.

இந்நிலையில், ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில் புதிதாக ஒரு பதிவை வெளியிட்டு, பாஜக-வினருக்கு பதிலடி கொடுத்துள்ளார். சிந்திப்பதற்கான தனது சுதந்திரத்தை யாரும் தடுக்க முடியாது என்று பொருள்படும் வகையில், ஜெய்ஹிந்த்  (#jaihind) என்றும் ப்ரீடம் ஆப் தாட் (#freedomofthought) என இரு ஹேஷ்டேக்குகளை அவர் பதிவிட்டு, பாஜக-வினரை மீண்டும் கதற விட்டுள்ளார். அவரின் இந்த டுவீட்-டும், சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

;