cinema

img

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவு

சென்னை, செப்.23- ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22ஆம் தேதி உலக ரோஜா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.    புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் நாளாக இந்த தினம், உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதன் மூலம் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கப்படுகிறது. இதனால் புற்று நோய் சிகிச்சை பெரும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை, எவ்வித பயமும் இன்றி விரைவில் குணமடையவும், அவர்களது வாழ்நாள் நீடிக்கும் எனவும் நம்பப்படுகிறது. இதில் ஒவ்வொரு ஆண்டும், பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் இந்த விழாக்களில் கலந்து கொள்வது வழக்கம். அந்தவகையில் சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனையில்  நடைபெற்ற உலக ரோஜா தினத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக நடிகர் சிம்பு கலந்துகொண்டார். இதில் அவர் சின்னஞ்சிறு குழந்தைகளுடன் சிம்பு டான்ஸ் ஆடி உற்சாகப்படுத்தினார்.

;