cinema

img

நாளை வெளியாகிறது அரண்மனை- 3

சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான ‘ அரண்மனை 3’ நாளை (அக்-14)திரையரங்கில் வெளியாகிறது.

நகைச்சுவை கலந்து உருவாக்கப்பட்ட ஹாரார் படங்களில் ஒன்றான ‘அரண்மனை’ ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றதோடு வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

அதன்பின் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், தற்போது மூன்றாம் பாகமான ‘அரண்மனை 3 ‘ நாளை அக்டோபர்-14 அன்று திரையரங்கில் வெளியாகிறது.

இப்படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, மறைந்த நடிகர் விவேக், யோகி பாபு, மனோபாலா உள்ளிட்டோருடன் இணைந்து இயக்குநர் சுந்தர்.சியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சத்யா.சி இசையமைத்துள்ளார்.

;