cinema

img

இது தமிழ்நாடாகவே இருக்கட்டும்...

தமிழ் சினிமாவில் வைகைப் புயல் என்று அறியப்பட்ட வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளுக்குத் தங்களது மனதைப் பறிகொடுக்காத தமிழ் ரசிகரும் இருக்கமுடியுமா என்ன? அப்படியானதொரு கலைஞன் சிலகாலமாக அதிகப் படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கின்ற நிலையிலும் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து கொரோனா நிவாரண நிதியாகத் தன் பங்கிற்கு ஐந்து லட்சம் ரூபாயை வழங்கியிருக்கிறார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து உரையாடிய வடிவேலுவிடம் ‘கொங்குநாடு’ என்று தமிழகத்தின் ஒரு பகுதியைப் பிரித்து யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்போவதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று ஊடகவியலாளர்கள் கேட்டனர். அதற்கு வடிவேலு ‘இது எப்போதும்போல தமிழ்நாடாகவே இருக்கட்டும்’ - என்று பதிலளித்துள்ளார்.‘தான் அரசியல் பேசவில்லை’ - என்றும் வழக்கம் போல கிண்டல் கலந்த நகைச்சுவையாகச் சொன்னார் வடிவேலு.

;