cinema

img

நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு இடைக்கால தடை!

நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை.
இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
2016ஆம் ஆண்டே உருவான இத்திரைப்படம் சில சிக்கல்களால் வெளியாகாமல் இருந்தது.
இதனைத்தொடர்ந்து, மார்ச் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், நெஞ்சம் மறப்பதில்லை படத்தை வெளியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கடன் நிலுவைத் தொகையை செலுத்தக்கோரி ரேடியன்ஸ் வீடியோ நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

;